வௌிநாடுகளில் இருந்து வருகை தந்த 39 பேர் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
அதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,234 ஆக அதிகரித்துள்ளது.
கட்டாரில் இருந்து வருகை தந்த 16 பேர்,
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகை தந்த 12 பேர்
குவைட்டில் இருந்து வருகை தந்த 6 பேர்
மற்றும் மாலைத்தீவில் இருந்து வருகை தந்த 2 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
அத்துடன் இத்தியோப்பியாவில் இருந்து வருகை தந்த ஒருவர்,
தாய்லாந்தில் இருந்து வருகை தந்த யுக்ரைன் நாட்டவர் ஒருவர் மற்றும் சிவப்பு கடற்கரை பகுதியில் இருந்து வருகை தந்த கடற் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரும் இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.
இதேவேளை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் 226 பேர் வைத்தியசாலையகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 39 பேர் பற்றிய விபரம்.
Reviewed by Madawala News
on
September 14, 2020
Rating: