கம்பஹா, திவுலப்பிட்டிய வைத்தியாசலைக்கு அருகில் உள்ள புத்தர் சிலை மீது
மலக்கழிவுகள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று அதிகாலை இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடபபட்டுள்ளது.
எனினும் தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரையில் தகவல் வெளியாகவில்லை என குறிப்பிடப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
புத்தர் சிலை மீது மலக்கழிவு மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.
Reviewed by Madawala News
on
September 14, 2020
Rating: