19 வது திருத்ததம் காரணமாக மைத்திரிபால சிரிசேனவின் பெயர் நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது ..
19 வது திருத்ததம் நிறைவேற்றப்பட்டமையின் காரணமாக மைத்திரிபால சிரிசேனவின் பெயர் நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூர்ய குறிப்பிட்டார்.
19 வது திருத்தம் தொடர்பில் மக்களுக்கு பிழையாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர் அதில் நல்ல விடயங்கள் பல அடங்கியுள்ளதாக கூறினார்.
19 ம் திருத்தம் காரணமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் ஒபாமா வந்து கதைக்கும் நிலமை ஏற்பட்டது .19 வது திருத்ததம் காரணமாக மைத்திரிபால சிரிசேனவின் பெயர் நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. மைத்திரிபால சிரிசேன நெல்சன் மண்டேலாவின் தம்பி என பொதுநலவாய நாடுகளின் செயலாளர் கூறினார் என குறிப்பிட்ட அவர் 20 ம் திருத்த சட்டமூலத்தினை நிறைவேற்ற இன்னும் காலம் எடுத்து ஆராய்ந்து பாராளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என கூறினார்.
19 வது திருத்ததம் காரணமாக மைத்திரிபால சிரிசேனவின் பெயர் நோபல் பரிசுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது ..
Reviewed by Madawala News
on
September 11, 2020
Rating: