ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அவர்கள் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்றக்கூடிய செயல்திறன் மிக்கவர்கள் எமது அணியிலேயே உள்ளனர் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சுஜீவ சேனசிங்க கூறினார்.
நேற்று இரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டார்.
கடந்த நல்லாட்சியில் தங்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்படவில்லை என கூறிய அவர் ஜனாதிபதியின் திட்டங்களை முன்னெடுத்து செல்லக்கூடிய செயற்திறன் மிக்க அணி ஐக்கிய மக்கள் சக்தியில் இருப்பதாக கூறினார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயலாற்றக்கூடிய செயல்திறன் மிக்கவர்கள் எமது அணியிலேயே உள்ளனர் ; சுஜீவ
Reviewed by Madawala News
on
August 02, 2020
Rating: