இந்நாட்டில் பதிவுசெய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப் படாத வாகனங்களின் விலை கணிசமாக
அளவு உயர்ந்துள்ளது.
பதிவு செய்யப்படாத மோட்டார் வாகனங்களின் விலை சுமார் 10 இலட்சம் ரூபாவாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், வாகன இறக்குமதியை நிறுத்துவதற்கு அரசாங்கம் எடுத்த முடிவால் இந்த நிலைமை ஏற்பட்டு ள்ளது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித் துள்ளது.
தற்போது நாட்டில் பதிவு செய்யப்படாத 10 ஆயிரம் முதல் 15 ஆயிரத்திற்கு இடைப்பட்ட வாகனங்களே உள்ளன, அவை அடுத்த ஆறு மாதங்களுக்கு மாத்திரமே போது மானதாக இருக்கும் என சங்கத்தின் பிரதான செயலாளர் பிரசாத் குலதுங்க தெரிவித்தார்.
அதன்படி, அடுத்த ஆறு மாத காலத்துக்குப் பின்னர் இந் நாட்டின் உள்ளூர் சந்தையில் வாகனங்களுக்குப் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்புள்ளது என அவர் மேலும் தெரிவித் தார்.
இலங்கையில் வாகனங்களுக்குப் பற்றாக் குறை ஏற்பட வாய்ப்பு.
Reviewed by Madawala News
on
August 28, 2020
Rating: