கொழும்பு மேகசின் சிறைச்சாலைக்கு அருகில் “ஹெராயின் கடத்ததிய பூனை” ஒன்றை பிடித்ததாக
இலங்கை சிறை அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
சிறைச்சாலை அதிகாரிகள் பூனையின் கழுத்தில் சிறிய பொதி ஹெராயின் கட்டப்பட்டு இருந்ததாக தெரிவித்தனர்.
பூனையுடன் கட்டப்பட்ட சிறிய பொதிக்குள் கிட்டத்தட்ட 2 கிராம் ஹெராயின், 2 சிம் கார்டுகள் மற்றும் ஒரு மெமரி காட் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
சிறைக்குள் போதைப்பொருள் கடத்த பூனை பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் நம்புகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெராயின் கடத்தலுக்கு கழுகு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகத்தின் பேரில் போலீசார் கடந்த வாரம் ஒரு நபருடன் 2 நபர்களை கைது செய்தனர்.
“ஹெராயின் போதைபொருள் கடத்ததிய பூனை” சிக்கியது. #இலங்கை
Reviewed by Madawala News
on
August 01, 2020
Rating: