பாறுக் ஷிஹான்
தமிழ் மக்களை ஏமாற்றி கருணா அம்மான் வாக்குகளை
அபகரிக்க வந்துள்ளதாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் குறிப்பிட்டார்.
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது தொடர்பாக ஜனநாயக போராளிகள் கட்சியுடளன் இணைந்து விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தெரிவித்ததாவது
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தமிழ் மக்களிற்கு முக்கியமானது.தற்போது அத்தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ள கருணா அம்மான் தினமும் பொய்களை கூறி வருகின்றார்.மக்களின் வாக்குகளை சூறையாடி எமது தமிழ் பிரதிநிதித்துவத்தை சிதைக்கின்றார்.
இவரின் செயற்பாட்டினால் அதாவுல்லாஹ் என்பவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
எனவே இவ்வாறான இனவாதம் பேசுபவர்கள் எமது தமிழ் பேசும் மக்கள் நிராகரிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
கருணாவின் செயற்பாட்டினால் அதாவுல்லாஹ் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு சந்தர்ப்பம் உள்ளது.
Reviewed by Madawala News
on
July 28, 2020
Rating: