வெளிநாட்டு கப்பல்களில் பணிபுரிந்த இலங்கையர்கள் உள்ளிட்ட 55 பயணிகள்,
இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
இதில் வெளிநாட்டு கப்பல்களில் பணியாற்றும் 47 பேரும் இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றும் 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 பேருமே இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 1.30 மணியளவில் கட்டார் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான கியு.ஆர் 688 என்ற விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளனரென, விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
55 இலங்கையர்கள் நாடு திரும்பினர்.
Reviewed by Madawala News
on
July 27, 2020
Rating: