கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் 2 நபர்கள் கண்டறியப்பட்டனர், (ஒருவர் நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்டவர், பல இடங்களுக்கும் சென்றவர்)
கம்பஹா மாவட்டத்தில் இரண்டு தனித்தனி பகுதிகளில் இருந்து
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
கந்தகாடு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையத்தின் பயிற்றுவிப்பாளராக ஒரு நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர் அவரை அங்கு கொண்டு சென்ற ஓட்டுநர் என்றும் மாவட்ட பொறுப்பாளரான பொது சுகாதார ஆய்வாளர் (PHI) தெரிவித்தார்.
கம்பாஹாவில் உள்ள டிக்கிரிராஜா மவத்தாவில் வசிக்கும் 37 வயதான ஓட்டுனர் , கடந்த செவ்வாய்க்கிழமை (07) கம்பாஹா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சாட்சியாக ஆஜரானதாகக் கூறப்படுகிறது.
இவர் பல இடங்களுக்குச் சென்று பலரையும் சந்தித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மற்றவர் காந்தகாடு புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த ஆலோசகர் இவர் கணேமுல்ல பகுதியில் நடந்த ஒரு மத விழாவில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
கந்தகாடு நிலையத்தில் கொரோனா பரவலை அடுத்து இடம்பெற்ற PCR பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கம்பஹாவில் கொரோனா வைரஸ் தொற்றுடன் 2 நபர்கள் கண்டறியப்பட்டனர், (ஒருவர் நீதிமன்ற அமர்வில் கலந்து கொண்டவர், பல இடங்களுக்கும் சென்றவர்)
Reviewed by Madawala News
on
July 14, 2020
Rating: