கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜோர்தானில் சிக்கியிருந்த 285 இலங்கையர்கள்
நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
ஶ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யூ.எல்-1506 எனும் விமானம் ஊடாக இன்று (14) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இவர்கள் வந்தடைந்துள்ளனர்.
இன்றைய தினத்துடன் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்குள் அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப் பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜோர்தானில் சிக்கியிருந்த 285 இலங்கையர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
Reviewed by Madawala News
on
July 14, 2020
Rating: