குவைத் : சல்வாவில் உள்ள ஒரு மதுபான தொழிற்சாலையை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் முற்றுகை இட்டுள்ளனர்.
பாதுகாப்பு வட்டாரத்தின் தகவல் படி, இரவு கடமையில் நிறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ரோந்துப் படையினர், நபர் ஒருவர் ஒரு பையை எடுத்துச் செல்வதைக் கண்டுள்ளார் , மேலும் குறிப்பிட்ட அந்த வெளிநாட்டு நபர் பாதுகாப்பு ரோந்துப் படையை கண்டவுடன், அப் பையை எறிந்துவிட்டு கட்டிடங்களின் உள்ளே ஒன்றில் ஓடி உள்ளார்.
அதன் பின்னர் பாதுகாப்புப் படையினர் குடியிருப்பில் நுழைந்தபோது, இலங்கையரை கைது செய்தனர்.
மதுபான உற்பத்தி கருவிகள் மற்றும் உபகரணங்களுடன் 39 பீப்பாய்கள் மதுபானம் கண்டுபிடிக்கப்பட்டது.
39 மதுபான பீப்பாய்கள், உபகரணங்களுடன் குவைத்தில் இலங்கையர் கைது.
Reviewed by Madawala News
on
June 30, 2020
Rating: