கொவிட் 19 தொற்று நோய் காரணமாக கட்டாரில்
சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் இன்று அதிகாலை 5.04 மணியளவில் தாயகம் வந்தடைந்துள்ளனர்.
இவர்கள் யூ.எல் - 218 ரக விமானத்தில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வருகைத் தந்தவர்களும் அவர்களின் உடமைகள் அடங்கிய பைகளும் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
பின்னர் அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் எவரும் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகவில்லை என கண்டறியப்பட்டுள்ளது.
அதன் பின்னர் அவர்கள் இராணுவத்தின் உதவியுடன் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
கட்டாரில் சிக்கியிருந்த 268 இலங்கையர்கள் நாடு திரும்பினர்.
Reviewed by Madawala News
on
May 27, 2020
Rating: