எதுவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென மக்களைக் கேட்டுக் கொள்கிறோம்.


ஹஸ்பர் ஏ ஹலீம்_
தற்போது நாடு முழுவதும் நிலவி வரும் கொரோனா வைரஸ் அபாய நிலை காரணமாக மக்களின்
அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்த சூழலில் எதுவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென மக்களைக் கேட்டுக் கொள்வதோடு,  தத்தமது பாதுகாப்பையும், இயல்பு நிலையையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு அன்பாக வேண்டிக் கொள்கிறேன் என  மறைந்த இராஜாங்க அமைச்சர் எம்.ஈ.எச்.மஹரூபின் புதல்வியும் ஐக்கிய தேசிய கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளரும் திருகோணமலை ஐக்கிய தேசிய கட்சியின் மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய ரோஹினா மஹரூப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்று (25) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்படுவதாவது

சமூகவலைதளங்களில் பலரும் விமர்சிப்பதைப்போல  அரசியல் என்பது அன்றாடக் கடமை அல்ல. அதைவிட முக்கியமானது மக்களின் ஆரோக்கியமும் சகவாழ்வுமே ஆகும்.

இதனை மாத்திரம் கருத்திற்கொண்டு,  அரசு மேற்கொள்ளும் பாதுகாப்பு  நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவீர்களென ஆணித்தனமாக நம்புகிறேன். 

தொடரும் ஊரடங்குச் சட்டத்தினால், வீட்டுக்குள் முடங்கிய அனைவரினதும் சங்கடங்களை நான் அறிவேன்.

இறைவன் உதவியால் இந்நிலமை மாறும் என்ற நம்பிக்கையோடு உங்கள் அனைவரினதும்  நலனுக்கு பிரார்த்திக்கிறேன் என மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
எதுவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். எதுவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாமென மக்களைக் கேட்டுக் கொள்கிறோம். Reviewed by Madawala News on March 26, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.