வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறையும்.


   இரு வார காலப்பகுதிக்குள் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள், 
மேலும் குறைவடையும் என, உள்ளக வர்த்தக மற்றும் நுகர்வோர் இராஜாங்க அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.


    பொருட்களின் விலைகள்  குறித்து, மக்களின் முறைப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு கொழும்பு, 4 ஆம் குறுக்குத்தெருவில் அமைச்சர்  கண்காணிப்பு விஜயமொன்றில் ஈடுபட்டார்.


   இங்கு  பொருட்களின் விலைகள்  தொடர்பாக அமைச்சர்  பரிசீலனை செய்தார்.

   இங்கு கருத்துத்தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,  கிழங்கு சாதாரண விலையிலேயே விற்கப்படுகிறது. அதேபோல், தற்போது வேறு நாடுகளில் இருந்து கிழங்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக, குறைந்த விலையில் நேரடியாக மக்களுக்கு வழங்க முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.


   பெரிய வெங்காயம் 80 ரூபாவிலிருந்து 100 ரூபா வரை விற்பனையாகிறது. வேறு நாடுகளில் இருந்து வருகின்ற வெங்காய வகைகளும் விற்பனைக்காக  உள்ளது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ  250 ரூபாவுக்கும், டின் மீன் 185 ரூபாவுக்கும் விற்பனையாகிறது.


    இந்தியாவில் பெரிய வெங்காயம் உற்பத்தி பாரியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களின் பின்னர் இந்தியாவில் இருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படும். இந்நிலையில்,  வெங்காயத்தின் விலை இன்னும் இரு வாரங்களில் குறைய வாய்ப்புள்ளது.


   தற்போது  சந்தையில் அரிசியின் விலை குறைந்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. நாட்டரிசியின் தொகை விலை 92 ரூபாவாகக் குறைவடைந்துள்ளது. இனி வரும் வாரங்களில் குறைந்த விலைகளில்  பொருட்கள் காணப்படும் என்றார்.

( ஐ. ஏ. காதிர் கான் )
வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறையும்.  வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை மேலும் குறையும். Reviewed by Madawala News on January 23, 2020 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.