இறுதி யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலை புலிகளால் புதைத்து வைக்கப்பட்டதாக
சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்துக்கு பின்புறமாக இன்றையதினம் (23)பொலிஸாரால் அகழ்வு நடவடிக்கை ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது .
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைவாக பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் ,இராணுவத்தினர் இணைந்து இந்த அகழ்வு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .
விடுதலைப் புலிகளின் தங்கம் மற்றும் ஆயுதங்களை தேடி அகழ்வு நடவடிக்கை
Reviewed by Madawala News
on
January 23, 2020
Rating: