ஈரானில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 19 பேர் பலியாகியுள்ளனர்.
ஈரான் நாட்டின் மஜாந்தரன் மாகாணத்தில் 50 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணம் செய்த பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
பிரேக்கில் கோளாறு ஏற்பட்டதால் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து, பயணிகளுடன் சென்ற பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும், 24 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்ற வாரம் அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதலில் இராணுவத் தளபதி உட்பட பலர் உயிர் இழந்த நிலையில் அவரின் என ஜனாஸா ஊர்வலத்தில் கலந்துகொண்டு 35 பேர் உயிரிழந்தனர் அதனைத் தொடர்ந்து உக்ரைன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் ஈரான் நாட்டவர்கள் 80 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் தற்போது பேருந்து விபத்தில் 19 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பேருந்து விபத்திற்குள்ளானதில் 19 பேர் உயிரிழப்பு.. #ஈரானில் தொடரும் சோகம்.
Reviewed by Madawala News
on
January 09, 2020
Rating: