க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுத வந்த மாணவிகளின் தலை மறைப்பை (ஃபர்தா) அகற்ற அனுராதபுர
மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளில் அங்கிருந்த மேற்பார்வையாளர்கள் எடுத்த முடிவு குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நேற்றைய பரீட்சையின் போது பரிட்சை வினாக்களுக்கு விடை அளித்துக் கொண்டிருந்த மாணவிகளின் பர்தாவை கழற்றுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இதை அடுத்து இது தொடர்பில் அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் பிரியந்த பெர்னாண்டோ அவர்களுக்கு தொலைபேசி மூலம் புகார்கள் அளிக்கப்பட்டன .
முஸ்லிம் மாணவிகளுக்கு பள்ளி சீருடையின் ஒரு பகுதியாக ஃபர்தாவுக்கு அவர்களுக்கு ஆடைகளை வழங்குவது அரசாங்கம்தான்.
இந்த பெண் பிள்ளைகளின் ஃபர்தாவை ஆண் மாணவர்களின் முன்னால் களைய செல்லும்படி கூறும்போது, அது மிகவும் சங்கடமாக இருக்கிறது.
ஒரு பரீட்சையின் போது அவர்களின் மனநிலையை உடைக்க இது மிகவும் இழிவான செயல் என்று பெற்றோர்கள் மேலும் தெரிவித்தனர் .
இலங்கையின் மேலும் சில இடங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதாக மேலும் அறிய முடிகிறது.
நேற்றைய சாதாரண தர பரீட்சையின் போது மாணவிகளின் தலை மறைப்பை (ஃபர்தா) அகற்ற உத்தரவு. பெற்றோர் விசனம்.
Reviewed by Madawala News
on
December 03, 2019
Rating: