கேள்விகளுக்கு பதில் தாருங்கள். சஜிதை அல்லது அநூரவை ஜனாதிபதி யாக கொண்டு வருவதில் உடன்படுகிறோம்.



அஸ்மி அப்துல் கபூர்
௧டந்த காலங்களில் தீவிரவாதிகளாக பல உயிர்களை சூறையாடிய ஜேவிபி யினருடன்
நல்லுறவுடன் பயணிக்க சொல்கிறீர்கள்?

வீதிகளில் டயர்களை போட்டு பின்டங்களாக எரியூட்டிய பிரமதாசாவின் மகனை ஆதரிக்க சொல்கிறார்கள்?

சமாதானமெனும் போர்வையில் 1990களில் வயல்களிலும் பள்ளிகளிலும் வீதிகளிலும் சுடப்பட்டும் கழுத்து அறுக்கப்பட்டும் பிணங்களாக கிடந்த முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய பிரமதாசாவின் மகனை ஜனாதிபதியாக்க சொல்கிறீர்கள்?

ஹெல உருமய எனும் முதலாவது சிங்கள இனவாத கட்சியை உருவாக்கி தனி இஸ்லாம் எனும் மார்க்கத்துகெதிராக பிரச்சாரம் செய்து அதையே தனது வாக்கி வங்கியாக கொண்டு இயங்கும் சம்பிக ரணவக்கவின் கொள்கை எனது கொள்கையாகும் எனும் சஜித்தை ஜனாதிபதியாக்க சொல்கிறீர்கள்?

பேருவளை அழுத்கம, தம்புள்ள பள்ளிவாசல் நுரைச்சோலை வீடு, வட்டமடு காணி வசீம் தாஜூதீன் என பேசி நூறு வீத முஸ்லீம் சமுகம் வாக்களித்து  ஆட்சிக்கு வந்த நீங்கள்

கிந்தோட்ட அம்பாரை திகன குளியாப்பிட்டி மினுவான்கொடை  என தொடர்ந்து பல நாள் கைகட்டி வாய் பொத்தி நின்று பொலிசாரும் ஆமிக்காரர்களும் பார்த்திருக்க மாற்று மத சமுகத்தால் துன்புறுத்தப்பட்டு உயிரிழந்த உடமைகளை இழக்க போகிறோம் என ஏற்கனவே அறிந்தும் ஐதேக அரசால் தடுக்க இயலாது போனாலும் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி எவ்வாறு சஜிதை ஆதரிக்க சொல்வீர்கள்?

நான்கரை வருடங்கள் நுரைச்சோலையின் வீட்டு திட்டத்தில் ஒரு வீடேனும் கிடைத்ததா?

வட்டமடு நிலத்தில் ஒரு போகம் விவசாயம் செய்தோமா?

தம்புல்ல பள்ளிக்கு ராஜபக்சாக்கள் மாற்று நிலம் வழங்கினார்கள் நீங்கள் ஏதேனும் செய்தீர்களா?

நீங்கள் வாக்குறுதி அளித்தபடி ஆகக் குறைந்தது சாய்ந்தமருது பிரதேச சபையை ஆவது பெற்று தந்தீர்களா?

இரண்டு வாரங்களுக்குள் தீர்த்து தருவோம் என முழங்கிய இறக்காம மாயக்கல்லி விவகாரத்தை கூட இரண்டரை வருடங்கள் நீங்கள் பேசாமலே விட்டு விட்டீர்கள்?

ராஜபக்சாக்கள் ஊழல்வாதிகள் என்றீர்கள் இன்று இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த மிகப் பெரிய ஊழலாக மத்திய வங்கி ஊழல் பிரஸ்தாபிக்கப்படுகிறது

நல்லாட்சி ஆரம்பிக்கும் போது அமெரிக்க ஏகோபத்தியம் நாட்டில் வருகின்றது என அறைகூவல் விடுக்கப்பட்டது. இன்று ஏகோபத்திய சூழ்ச்சியால் சஹ்ரான் எனும் கயவன் இயங்கி இந்த நாட்டின் நிம்மதியான 
முஸ்லீம் சமுகத்தை அச்சமூட்டி நிம்மதி இழக்க செய்திருக்கிறான் என நீங்களே கூறி நிற்கிறீர்கள்?

யாரோ இனவாதிகள் ரிசாட் எனும் தனி மனிதனை பதவி விலக சொன்னால் முஸ்லீம் சமுகத்தில் அவர் ஹீரோ ஆகி விடுவார் எனும் அச்ச அரசியலால் ரணிலின் கட்டளைக்கு பயந்து மொத்தமாக ராஜனாமா செய்து முஸ்லீம்கள் எல்லோரையும் காட்டிக் கொடுத்த விதம் ஆரோக்கியமானதாக கருதுகிறீர்களா?

இந்த முதற்கட்ட கேள்விகளுக்கு பதில் தாருங்கள்.
இல்லையென்றால் பெரும்பாலான சிங்கள மக்கள் விரும்பும் தலைமை கோட்டபாயவுக்கு வாக்களித்து முஸ்லீம் சிங்கள சமுகம் நல்லெண்ணத்துடன் வாழ அல்லாஹ் வுக்காக வழி விடுங்கள்.
கேள்விகளுக்கு பதில் தாருங்கள். சஜிதை அல்லது அநூரவை ஜனாதிபதி யாக கொண்டு வருவதில் உடன்படுகிறோம். கேள்விகளுக்கு பதில் தாருங்கள். சஜிதை அல்லது அநூரவை ஜனாதிபதி யாக கொண்டு வருவதில் உடன்படுகிறோம். Reviewed by Madawala News on October 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.