அக்குரெஸ்ஸ, திப்பட்டுவாவ சந்தியில் பொலிஸார் இருவர்
மீது இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸார் மீதே துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த பொலிஸார் சிகிச்சைகளுக்காக மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு பொலிஸார் ரோந்து பணியில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சந்தேககத்திற்கு இடமான மோட்டார் சைக்கிள் ஒன்றை நிறுத்துமாறு பணித்துள்ளனர்.
இருப்பினும் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் பயணித்ததை அடுத்து பொலிஸார் அவர்களை துரத்தி சென்றுள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் துப்பாக்கி பொலிஸார் மீது பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இன்று (01) அதிகாலை 1 மணி அளவில் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேக நபர்கள் இருவரும் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் போலீசார் மீது துப்பாக்கி சூடு.. போலீசார் காயம்.
Reviewed by Madawala News
on
September 06, 2019
Rating: