தெடிகமுவ, ஜயமாவத்தை, சமகி மாவத்தையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 9 மில்லிமீற்றர்
ரக துப்பாக்கியொன்றும் வெற்று தோட்டா செலுத்தியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தர் சிலையொன்றுக்கு பின்புறமாக வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராஜகிரிய விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து நேற்று (17) பகல் இவை மீட்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 15 ஆம் திகதி ஹங்வெல்ல, எம்புல்கம சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு மற்றும் இருவர் காயமடைந்த சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டா செலுத்தி ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், குறித்த பொருட்கள் நவகமுவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
புத்தர் சிலையொன்றுக்கு பின்புறமாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி மீட்பு !
Reviewed by Madawala News
on
September 18, 2019
Rating: