பொத்துவில் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்து . ஹுசைன் முஹம்மத் ஹசின் ( 15 வயது ) உயிரிழப்பு.


நேற்று மாலை 6 மணி அளவில் பொத்துவில் பொலிஸ் பிரிவில் பொத்துவில் சியம்பலாண்டுவ வீதியில்
இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சியம்பலாண்டுவ 312 கட்டை அருகில் பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி கொங்கிரீட் கம்பம்  ஒன்றில் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

 இந்த விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் .

உயிரிழந்தவர் பதுளை  பிரதேசத்தை சேர்ந்த 15 வயது  ஹுசைன் முஹம்மத் ஹசின் என தெரிவிக்கப்படுகிறது.

 அவரின் ஜனாசா பொத்துவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது விசாரணைகள் இடம் பெறுகிறது
பொத்துவில் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்து . ஹுசைன் முஹம்மத் ஹசின் ( 15 வயது ) உயிரிழப்பு. பொத்துவில் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற விபத்து . ஹுசைன் முஹம்மத் ஹசின் ( 15 வயது ) உயிரிழப்பு. Reviewed by Madawala News on September 14, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.