பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான வைத்தியர் சிவரூபனை விடுதலை செய்யக் கோரி போராட்டம்.


பளை வைத்தியசாலை கைது செய்யப்பட்ட வைத்தியர் சிவரூபனை  விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு
போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது..

இந்தப் போராட்டம் இன்று காலை 9 மணியளவில் பளை வைத்தியசாலை முன்பாக நடைபெற்றது.

இதன்போது கைது செய்யப்பட்ட வைத்தியரை விடுதலை செய்யுமாறும், பதில் வைத்தியரை நியமிக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பளை வைத்தியசாலை மருத்துவ பொறுப்பதிகாரி வைத்தியகலாநிதி .சிவரூபன்   பயங்கரவாத தடுப்பு பிரிவினரால்  பளை வைத்தியசாலையில் வைத்து கைதாகியுள்ளார்.

மட்டக்களப்பினை சேர்ந்த சிவரூபன் யாழில் திருமணம் முடிந்திருந்ததுடன் யாழில் வசித்தும் வருகின்றார்.

யுத்த அழிவை சந்தித்திருந்த பளை வைத்தியசாலையினை மீளக்கட்டியெழுப்பிய முக்கிய பங்கு சிவரூபனை சேரும் எனவும் அவரது கைது திட்டமிட்ட சதியெனவும்   அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான வைத்தியர் சிவரூபனை விடுதலை செய்யக் கோரி போராட்டம். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதான வைத்தியர் சிவரூபனை  விடுதலை செய்யக் கோரி போராட்டம். Reviewed by Madawala News on August 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.