முஸ்லிம் காங்கிரசின் அராஜக அரசியல் தேர்தலுக்கு முன்னரே ஒலுவிலில் ஆரம்பமா.?


- ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட் -
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ்
மஹ்ரூஃப் குழுவினர் மீது ஜனநாயக செயற்பாட்டினை மீறும் வகையில் இன்று 20.07.2019 சனிக்கிழமை அம்பாறை ஒழுவிலில் வைத்து முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரால் தாக்குதல் நடத்தப்பட்டமையினை பார்க்கின்ற பொழுது தேர்தல் காலம் நெருங்குவதற்கு முன்னரே முஸ்லிம் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர்கள் அராஜக அரசியலில் ஈடுபட தொடங்கியுள்ளார்களா?.! என்ற கேள்வி எழத் தொடங்கியுள்ளது.

ஒலுவில் துறைமுக அதிகார சபை தங்குமிட பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கலந்துறையாடலில் கலந்து கொண்டு கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூஃப் ஊடகங்களுக்கு செவ்வி வழங்கி கொண்டிருந்தற்கு பிற்பாடே குறித்த இடத்திற்கு வருகை தந்த மேற்படி முஸ்லிம் காங்கிரஸ் குழுவினரால் தாக்குதல் தொடுக்கப்பட்டதாக அறியக்கிடைக்கின்றது.

இதன் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தொடர்பாக செவ்வியில் கருத்து தெரிவிக்கப்பட்டதே சம்பவத்துக்கு பிரதான காரணம் எனவும் , சம்பவத்துக்கு பின்னர் குறித்த பிரதேசத்தில் டயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதுடன், அப்துல்லா மஹ்ரூபின் வாகனம் சேதமாக்கப்படதாகும், அவர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்பதும் அங்கிருந்து வருகின்ற செய்திகள் மூலம் அறியக்கிடைக்கின்றது. சம்பவ இடத்திற்கு இராணுவமும், கடற்படையினரும் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் குறித்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

நாட்டில் முஸ்லிம்கல் எதிர் கொண்டுள்ள அடிப்படை உரிமை பிரச்சனைகளுக்கு மத்தியில் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டிய இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஜனநாயகத்தினை மீறும் வகையிலும், பேரின வாத சக்திகள் மேலும் சந்தோசப்பட்டு கைகொட்டி சிரிக்கும் வகையில் வகையில் கட்சி பேத அரசியல் கலாச்சாரத்தினை  கையிலெடுத்து தேர்தலுக்கு முன்னரே அராஜக அரசியலினை மேற்கொள்ள எத்தனிப்பவர்களுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரசின் தலைமையானது மெளனம் காக்காமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இந்த நாட்டு முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தமட்டில் சமகாலத்தில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கின்றது.
முஸ்லிம் காங்கிரசின் அராஜக அரசியல் தேர்தலுக்கு முன்னரே ஒலுவிலில் ஆரம்பமா.? முஸ்லிம் காங்கிரசின் அராஜக அரசியல் தேர்தலுக்கு முன்னரே ஒலுவிலில் ஆரம்பமா.? Reviewed by Madawala News on July 20, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.