நான் அனைத்து மகா சங்கத்தினரையும் சுட்டிக்காட்டிப் பேசவில்லை. கூக்குரலிட்டு கத்திக் கொண்டு திரியும் சில தேரர்கள் என்றே கூறினேன்.
மகா சங்கத்தினர் தொடர்பில் விடுக்கப்பட்ட அறிவிப்பு தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைச்
சந்தித்து நாளை (17) விளக்கமளிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு விளக்கமளிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் நேற்று விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பு தொடர்பில் வினவியதற்கே ரஞ்ஜன் இவ்வாறு கூறியுள்ளார்.
நான் அனைத்து மகா சங்கத்தினரையும் சுட்டிக்காட்டிப் பேசவில்லை. கூக்குரலிட்டு கத்திக் கொண்டு திரியும் சில தேரர்கள் என்றே கூறினேன். இதனையே என்னுடைய அரசியல் எதிரியொருவர் திரிபுபடுத்தி ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார் எனவும் ரஞ்ஜன் ராமநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார். D C
நான் அனைத்து மகா சங்கத்தினரையும் சுட்டிக்காட்டிப் பேசவில்லை. கூக்குரலிட்டு கத்திக் கொண்டு திரியும் சில தேரர்கள் என்றே கூறினேன்.
Reviewed by Madawala News
on
July 17, 2019
Rating: