புலி­கள் போல் உறு­முவதை, பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை தமி­ழர் நிறுத்த வேண்­டும்; ஞான­சா­ரர் எச்சரிக்கை!


தமி­ழர்­கள் புலி­கள் போல் உறு­மிக்­கொண்டு திரள்­வ­தை­யும், சிங்­கள – பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை­யும்
உடன் நிறுத்த வேண்­டும். இது சிங்­கள – பௌத்த நாடு என்­பதை அவர்­கள் கவ­னத்­தில்­கொள்ள வேண்­டும். கன்­னி­யாப் பிரச்­சினை தொடர்­பில் முடி­வெ­டுக்­கும் அதி­கா­ரம் சிங்­கள – பௌத்த மக்­க­ளுக்கே இருக்­கின்­றது.

இவ்­வாறு பொது­ப­ல­சேனா அமைப்­பின் பொதுச் செய­லர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் தெரி­வித்­தார்.

கன்­னி­யா­வில் அமை­தி­வ­ழி­யில் போரா­டிய தமிழ் மக்­கள் மீது சிங்­க­ள­வர்­க­ளால் மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல் தொடர்­பில் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பிரச்­சி­னை­க­ளுக்­குப் போராட்­டம் என்ற பெய­ரில் அச்­சு­றுத்­தல் விடு­விப்­பதோ அல்­லது வன்­மு­றை­க­ளில் இரு இனத்­த­வர்­க­ளும் – இரு மதத்­த­வர்­க­ளும் ஈடு­ப­டு­வதோ அழ­கல்ல.


இந்த ஆட்சி இனக்­க­ல­வ­ரத்­துக்­கும் மதத்­க­ல­வ­ரத்­துக்­கும் தூப­மிட்­டுள்­ளது. விரை­வில் ஆட்சி மாற்­றம் இடம்­பெ­றும். பௌத்த தேரர்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் சிங்­கள ஆட்சி விரை­வில் மல­ரும்.

அந்த ஆட்­சி­யில் சிங்­கள, தமிழ், முஸ்­லிம் என மூவின இனத்­த­வர்­க­ளும் ஒற்­று­மை­யாக வாழும் நில­மையை நாம் உரு­வாக்­கு­வோம் – என்­றார்
நன்றி ; உதயன்
புலி­கள் போல் உறு­முவதை, பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை தமி­ழர் நிறுத்த வேண்­டும்; ஞான­சா­ரர் எச்சரிக்கை! புலி­கள் போல் உறு­முவதை, பௌத்த மக்­களை அச்­சு­றுத்­து­வ­தை தமி­ழர் நிறுத்த வேண்­டும்; ஞான­சா­ரர் எச்சரிக்கை! Reviewed by Madawala News on July 17, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.