வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல்.


வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


காலி, மீட்டியாகொட பிரதேசத்திலுள்ள வீட்டின் மீது நேற்றிரவு இரவு கைக்குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முகத்தை மூடி வந்தவர் வீட்டின் ஜன்னல் ஒன்றை உடைத்துவிட்டு வீட்டுக்குள் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றுள்ளார். எனினும் அந்த கைக்குண்டு வெடிக்காமையினால் எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீட்டின் ஜன்னலை உடைக்கும் சந்தர்ப்பத்தில் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சோதனையிட்டுள்ளனர். இதன்போது ஜன்னலுக்கு அருகில் கைக்குண்டை அவதானித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல். வீடொன்றின் மீது கைக்குண்டுத் தாக்குதல். Reviewed by Madawala News on May 27, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.