சுமார் 79.3 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் இரண்டு பேர் கடற்படை அதிகாரிகளால்
வடக்கு கடல் பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினர் இன்று காலை கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த கேரளா கஞ்சா தொகையுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவை படகு ஒன்றின் மூலம் இலங்கைக்கு கொண்டு வர முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் கேரளா கஞ்சா தொகையும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
சுமார் 79 கிலோ கேரள கஞ்சா சிக்கியது. #வடக்கு கடல் பரப்பில்.
Reviewed by Madawala News
on
May 11, 2019
Rating: