சாதிக் இப்ராஹீம் மற்றும் சஹீத் இப்ராஹீம் தலைமறைவாகியிருந்த நாவலபிட்டி பாதணி விற்பனை நிலையம் சோதனை.


தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மொஹமட் சாதிக் இப்ராஹீம் 
மற்றும் மொஹமட் சஹீத் இப்ராஹீம்  தலைமறைவாகியிருந்த நாவலபிட்டி – நுவரெலிய வீதியில் அமைந்துள்ள பாதணி விற்பனை நிலையம் இன்றைய தினம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

காவல்துறை மோப்ப நாய் மற்றும் காவல்துறை அதிரடிப்படையினரும் இணைந்து அந்த பாதணி நிலையம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம்  இரவு குறித்த இருவரும் அந்த பாதணி நிலையத்தின் மூன்றாவது மாடியில் மறைந்திருந்த நிலையில், கைது செய்யப்பட்டனர்.

கைதின் பின்னர் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரும் சகோதரர்கள் என தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு சொந்தமானது எனக் கூறப்படும் மாவனெல்ல பகுதியில் உள்ள இரண்டு வீடுகளும் நேற்றைய தினம் சோதனைக்கு உற்படுத்தப்பட்டுள்ளன

சாதிக் இப்ராஹீம் மற்றும் சஹீத் இப்ராஹீம் தலைமறைவாகியிருந்த நாவலபிட்டி பாதணி விற்பனை நிலையம் சோதனை. சாதிக் இப்ராஹீம்  மற்றும்  சஹீத் இப்ராஹீம்   தலைமறைவாகியிருந்த நாவலபிட்டி பாதணி விற்பனை நிலையம் சோதனை. Reviewed by Madawala News on April 29, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.