மாவனல்லை சிலை உடைப்பு , புத்தளம் வெடி பொருள் மீட்பு , நேற்றைய தாக்குதல் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை ..
மாவனல்லை சிலை உடைப்பு, புத்தளம் வனாதுவில்லு வெடிப்பெருள் மீட்பு , கிரிஸ்தவ
தேவாலய தாக்குதல்கள் ஆகிய அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை என அமைச்சர் பாடலி சம்பிக ரனவக குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பில் நடந்த ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்டா அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடன் நத்தல் தினத்தில் மாவனல்லை பகுதியில் புத்தர் சிலைகள் சிலவற்றிற்கு சேதம் விளைவிக்கப்பட்டது. அந்த சம்பவத்தில் இருவர் கைதானார்கள். பின்னர் புத்தளம் அருக்காலு வனாதுவில்லுவில் வெடிபெருட்கள் மீட்கப்பட்டன. தற்பொது பாரிய தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டவை.
ஜனாதிபதி பிரதமர் எதிர்கட்சி தலைவர் ஆகியோர் ஒருவரை நோக்கி மற்றவர் விரல் நீட்டாமல் குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
மாவனல்லை சிலை உடைப்பு , புத்தளம் வெடி பொருள் மீட்பு , நேற்றைய தாக்குதல் ஒன்றோடொன்று தொடர்பு பட்டவை ..
Reviewed by Madawala News
on
April 22, 2019
Rating: