தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான எதிர்ப்பார்ப்பில்  ஒரு மல்வானை இளைஞன்!!!


மல்வானை, பள்ளம் பிரதேசத்தை சேர்ந்த பத்ஹான் பாருக், எதிர்வரும் மாதம் கொழும்பு, சுகததாச விளையாட்டரங்கில் நடைபெற உள்ள *2019 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய ஜுனியர் சாம்பியன்ஷிப்* போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

20 வயதுக்கு உட்பட்ட 200 மீற்றர் மற்றும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் இவர் பங்குபற்ற உள்ளார்.

நாட்டின் பல பாகங்களில் இருந்தும் அந்தந்த மாவட்டங்களில் சிறந்த சாதனைகள் படைத்த இளைஞர்கள் கலந்து கொள்ளும் இத் தேசிய ரீதியிலான ஒரு போட்டிக்கு மல்வானையில் இருந்து ஒரு மாணவன் தெரிவு செய்யப்பட்டுள்ளது பெருமைக்குரிய விடயமாகும்.

இது போன்ற தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டியொன்றுக்கு இதற்கு முன்னர் பல மல்வானை இளைஞர்கள் சென்றிருந்தாலும் சமீப காலத்தில் யாரும் மாகாண மட்டத்தில் கூட பிரகாசிக்கவில்லை.
இவ்வாறான நிலையில் இவரது பங்கேற்பு ஒரு சாதனையாகவே கருத முடியும்.

*இப்போட்டியில் இவர் வெற்றி பெற்றால் 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள தெற்காசிய நாடுகளின் இளைஞர் சாம்பியன்ஷிப் தெரிவு செய்யப்படுவார்*. 
இவரது வெற்றி, எமது ஊரையும், எமது முஸ்லிம் சமூகத்தையும் நிச்சயம் பெருமைப்படுத்தும்... 


அல் முபாரக் தேசிய பாடசாலையின் முன்னாள் மாணவனான பத்ஹான் தற்போது வெலிகம அரபா வித்தியாலயத்தில் உயர் தரம் கற்று வருகிறார்.

இவர் வெற்றி பெற மல்வானை நியூஸ் சார்பாகவும் மல்வானை மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான எதிர்ப்பார்ப்பில்  ஒரு மல்வானை இளைஞன்!!! தெற்காசிய விளையாட்டுப் போட்டிக்கான எதிர்ப்பார்ப்பில்  ஒரு மல்வானை இளைஞன்!!! Reviewed by Madawala News on April 11, 2019 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.