சட்டவிரோதமான முறையில் ஒருதொகை தங்கத்தை கடத்த முற்பட்ட விமான
நிலைய ஓடுதள அதிகாரி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் நான்கு கிலோ கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட அவர் விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார் 3 கோடி ரூபா என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
3 கோடி ரூபா தங்கத்தை கடத்த முற்பட்ட விமான நிலைய ஓடுதள அதிகாரி கைது.
Reviewed by Madawala News
on
April 11, 2019
Rating: