24 வருடத்துக்குப் பின்னர் ஐ.தே.கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக்கவுள்ளோம்.. அவர் சந்திரிக்கா போல் அமோகமாக வெற்றி பெறுவார்.
சந்திரிக்கா குமாரதுங்கவின் பின்னர் இந்நாட்டு ஜனாதிபதித் தேர்தலில் அமோக வெற்றியொன்றை
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பெற்றுக் கொள்ளவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
கடந்த 24 வருடத்துக்குப் பின்னர் ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி ஒருவரை ஜனாதிபதியாக்கவுள்ளோம். இந்த நடவடிக்கையை நிறுத்துவதற்கு யாருக்கும் முடியாது.
மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் கூறினார். அமைச்சருக்கும் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் இரகசிய சந்திப்புக்கள் இடம்பெறுவதாக கூறப்படும் கருத்துத் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்,
சஜித் பிரேமதாசவுடன் கடந்த 12 ஆம் திகதி பிரபல ஹோட்டல் ஒன்றில் இரகசிய சந்திப்பு இடம்பெற்றதாக கூறப்படுவது பொய்யாகும். அன்றைய தினம் நான் நாட்டில் இருக்கவில்லை. இருப்பினும், எம்மிடையே பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெறுகின்றன. அதனை சதி என்று கூறமுடியாது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். D C
24 வருடத்துக்குப் பின்னர் ஐ.தே.கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக்கவுள்ளோம்.. அவர் சந்திரிக்கா போல் அமோகமாக வெற்றி பெறுவார்.
Reviewed by Madawala News
on
April 21, 2019
Rating: