தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் குற்றப்புலனாய்வு
திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி - ரத்கமயில் வர்த்தகர்கள் இருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.
ரத்கம - உதாகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய ரசேன் சிந்தக மற்றும் 33 வயதுடைய மஞ்சுள அசேல ஆகியோர் கடந்த மாதம் 23 ஆம் திகதி நீல நிற வேன் ஒன்றில் வந்த குழு ஒன்றினால் கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே இச்சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நீல வேனில் வர்த்தகர்கள் இருவர் கடத்தப்பட்ட சம்பவம்.. இன்று சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் கைதானார்.
Reviewed by Madawala News
on
February 22, 2019
Rating: