சமூக வலைத்தளங்கள் ஊடாக நபர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில்
செயற்படுபவர்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மாக்கந்துர மதுஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்ட போதை வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானுடன் தனக்குத் தொடர்பு இருப்பதாக, சமூக வலைத்தளங்கள் ஊடாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாகவும், இவ்வாறான போலி பிரசாரங்களால் தொடர்பில் எதிர்வரும் நாள்களில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், இதற்கான தகவல்களைச் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கஞ்சிபான இம்ரானுடன் எனக்குத் தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் போலி பிரசாரம் செய்கிறார்கள்.
Reviewed by Madawala News
on
February 17, 2019
Rating: