(கரீம் எ.மிஸ்காத்)
புத்தளம், அறுவாக்கல்லு பகுதியில் கொழும்பு குப்பை தட்டும் திட்டத்திற்கு,
எதிர்ப்பு தெரிவித்து புத்தளம் பிரதேசத்தின் அனைத்து வாழ் சமூகமும் கடுமையான எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.
இத்திட்டத்தினை முன்னெடுப்பதனை தடுக்கக் கோரி
புத்தளத்தில் மூன்று நாள் கறுப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டு
இரண்டாவது நாளான நேற்று (வியாழன் 14/02) புத்தளம் வாழ் மக்கள் நோன்பு நோற்று துவா பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.
நோன்பு திறக்கும் நிகழ்வு புத்தளம் கொழும்புபேஸ் கடற்கரை திடலில் இடம்பெற்றது.
இதில் நோன்பு நோற்ற ஆண்களும், பெண்களும் நோன்பு திறந்தனர்.
இங்கு சர்வமத தலைவர்களும் கலந்து சிறப்புரையாற்றினர்.
புத்தளத்தின் கறுப்பு தினம் இரண்டாம் நாள் நிறைவடைந்தது..
Reviewed by Madawala News
on
February 15, 2019
Rating: