மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் டுபாயில் மரண தண்டனை
வழங்கப்படும் என டுபாய் பாதுகாப்பு பிரிவினரை மேற்கோள் காட்டி தகவல் வெளியாகியுள்ளது.
போதை பொருள் குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மதுஷ் குழுவினரின் ரத்த மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் போதை பொருள் பாவனை மற்றும் போதை பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டுகளில் இவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மதுஶ் குழு டுபாயை மையமாக கொண்டு போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தொடர்பிலும் டுபாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
டுபாய் நாட்டில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தகது.
மாகந்துரே மதுஷ் உள்ளிட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் டுபாயில் மரண தண்டனை !!
Reviewed by Madawala News
on
February 08, 2019
Rating: