-பாறுக் ஷிஹான் -
புத்தளம் மறிச்சிக்கட்டி (வில்பத்து) பாதை அவலம் தீர்வின்றி தொடரும் அவலமாக மாறி வருகிறது.
குறிப்பாக இப்பாதை மோசமாக இருப்பதால் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
புத்தளம் மாவட்டத்தை ஊடறுத்து செல்லும் மறிச்சிக்கட்டி (வில்பத்து) பாதை சேறும் சகதியுமாக காணப்படுகிறது.இது தவிர புத்தளம் மறிச்சிக்கட்டி (வில்பத்து) பாதையின் நுழைவாயிலில் அமைந்துள்ள மதகின் மேலால் தண்ணீர் பாய்ந்தால் அந்த நாள் பயணிகள் பாதையை கடப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
குறித்த பாதை சீரின்மையால் நடுக்காட்டில் இறக்கப்படும் அவலம் தொடர்கிறது.
புத்தளம் மறிச்சிக்கட்டி (வில்பத்து) பாதை அவலம். மக்கள் அவதி. (படங்கள்)
Reviewed by Madawala News
on
January 06, 2019
Rating: