நாளைய தினம் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரச உயர்மட்ட தகவல்களை
மேற்கோள் காட்டி பிரதான சிங்கள மொழி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளமை காரணமாக இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஒக்டேபர் 26 ம் திகதிக்கு முன்னர் விலை சூத்திரம் அமுல்படுத்தப்பட்ட போது 10 ம் திகதிகளில் எரிபொருள் விலை பரிசீலனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.அந்த வகையில் நாளை 10 ம் திகதி எரிபொருள் விலை பரிசீலனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
நாளை எரிபொருள் விலை அதிகரிக்கிறது ?
Reviewed by Madawala News
on
January 09, 2019
Rating: