நாடாளுமன்றை கலைக்கும் முடிவை கைவிடுவது தொடர்பில் சிந்திக்கவில்லை என
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன குறிப்பிட்டுள்ளார்.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை டிசம்பர் 31 க்கு முன்னர் தீர்க்க முடியாமல் போனால் பொதுத்தேர்தலுக்கு செல்வதே ஒரே வழி என அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து செயலாற்றும் நிலமை வந்தால் எவ்வாறு அவர்களுடன் இணைந்து செயலாற்றுவது தொடர்பில் தான் ஆராய்வேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் முன்னரும் கூறினேன் , தற்போதும் கூறுகிறேன் , எதிர்காலத்திலும் இதனையே கூறுவேன் “ நான் ரனில் விக்ரமசிங்கசிங்கவுடன் இணைந்து செயலாற்ற மாட்டேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சஜித் பிரேமதாச என்மீதுள்ள நம்பிக்கையின்மை காரணமாக பிரதமர் பதவியை ஏற்க மறுக்கவில்லை. ரனில்மீதுள்ள அச்சம் காரணமாகவே அவர் ஏற்க மறுத்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றை கலைக்கும் முடிவை கைவிடுவது தொடர்பில் சிந்திக்கவில்லை
Reviewed by Madawala News
on
December 03, 2018
Rating: