- பாறுக் ஷிஹான் -
யாழ்ப்பாணம் காரைநகர் – கிழுவனையில் வசிக்கும் ஆறுமுகம் விஜயலட்சுமி என்ற 77
வயது மூதாட்டி தனது வாழ்வாதாரத்திற்காக வீட்டுத்தோட்டம் செய்துவருகின்றார்.
தனிமையில் வசிக்கும் இவர் வேறு எவரினதும் உதவிகளும் இன்றி தானே நிலத்தைப் பண்படுத்தி, வேலிகள் அடைத்து வீட்டுத்தோட்டம் செய்கின்றார்.
இவரது தோட்டத்தில் அதிகளவில் கௌபி பயிரிடப்பட்டுள்ளது. ஏனைய மரக்கறிப் பயிர்களும் செய்கை பண்ணப்பட்டுள்ளன.
77 வயதில் தனி ஒருவராக இவரின் அயராத உழைப்பும் அசத்தும் திறமையும் கண்டு பலர் பூரிப்பில் வியக்கின்றனர்.
ஆறுமுகம் விஜயலட்சுமி மன உறுதி தொடர்பான காணொளிப் பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
(வீடியோ இணைப்பு) 77 வயதிலும் வீட்டுத் தோட்டம் செய்து அசத்தும் மூதாட்டி விஜயலட்சுமி...
Reviewed by Madawala News
on
December 09, 2018
Rating: