இளம் பிக்கு ஒருவர் உற்பட ஏழு சந்தேக நபர்களை கைது செய்த போலீசார்.


 (மொஹொமட்  ஆஸிக்)​​
பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாரத்துகொட பிரதேசத்தில்
புதையல் தோண்டியதாக சந்தேகத்தின் பேரில் இளம் பிக்கு ஒருவர் உற்பட ஏழு சந்தேக நபர்களை பூஜாபிட்டிய பொலீஸார் நேற்று  02 ம் திகதி மாலை கைது செய்துள்ளனர்.

பொலீஸாருக்கு  கிடைத்த தகவல் ஒன்றின்படி  விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார் இச் சந்தேக நர்களை கைது செய்துள்ளனர்.


பூஜாபிட்டிய பொலிஸ் பிரிவில் மாரத்துகொட  பிரதேசத்தில் தனியார் காணி ஒன்றில் காட்டுப் புறத்தில் புதையல் தோண்டும் போது இச் சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.


இவர்களுடன்  நிலத்தை தோண்டுவதற்காக பயன்படுத்தபடும் உபகரணங்கள் பூஜைக்கான பொருட்கள்  ஆகியவற்றையும் பொலீஸார் கைப்பற்றி உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜாஎலை, கந்தானை, கனேமுல்ல மற்றும்  கம்பளை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 18 முதல் 52  வயதினை  கொண்டவர்கள் எனவும் பொலீஸார் தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நளை 03 ம் திகதி  கலகெதர நீதவான் முன் ஆஜர் செய்ய உள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்தனர்.

2018 12 02 ஆஸிக்
இளம் பிக்கு ஒருவர் உற்பட ஏழு சந்தேக நபர்களை கைது செய்த போலீசார். இளம் பிக்கு ஒருவர் உற்பட ஏழு சந்தேக நபர்களை கைது செய்த போலீசார். Reviewed by Madawala News on December 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.