நாங்கள் தான் இன்னும் அமைச்சர்கள்... பொலிஸ் தலைமையகத்துக்குச் செல்ல உள்ள ஐ.தே.க உறுப்பினர்கள்.


சபாநாயகரின் அறிக்கைக்கமைய, தாம் இன்னும் அமைச்சர்களாகவே இருப்பதாகத் தெரிவித்து, ஐக்கிய
தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று பொலிஸ் தலைமையகத்துக்கு செல்லத் தீர்மானித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, நளின் பண்டார, பாலித தெவரப்பெரும உள்ளிட்டோரே பொலிஸ் தலைமையகத்துக்குச் செல்லத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமது பாதுகாப்புகளுக்காக வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், பொலிஸ்மா அதிபரிடம் வினவுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தயா கமகே, தம்முடைய பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைத்தமையால் தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பை பொலிஸ்மா அதிபரே ஏற்க வேண்டுமெனவும் தயா கமகே தெரிவித்துள்ளார்.
நாங்கள் தான் இன்னும் அமைச்சர்கள்... பொலிஸ் தலைமையகத்துக்குச் செல்ல உள்ள ஐ.தே.க உறுப்பினர்கள். நாங்கள் தான் இன்னும் அமைச்சர்கள்... பொலிஸ் தலைமையகத்துக்குச் செல்ல உள்ள ஐ.தே.க உறுப்பினர்கள். Reviewed by Madawala News on November 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.