இப்படியொரு அரசியல் நிலைமை நாட்டில் ஏற்படும் என ஒருபோதும் நினைத்துப்பார்க்கவில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 180 பாகை மறுபக்கம் சாய்ந்து செயற்பட்டிருக்கின்றார் என்று முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
தற்போதைய அரசியல் நெருக்கடி தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே ராஜித சேனராத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், நான் இவ்வாறான ஒரு அரசியல் நிலைமை ஏற்படும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. எனது அரசியல் வாழ்க்கையில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படவில்லை. ஜனாதிபதி 180 பாகை மறுபக்கம் சாய்ந்து செயற்பட்டிருக்கின்றார்.இதனை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நான் தற்போது இருக்கின்ற முகாமிலேயே இருந்து ஜனநாயகத்துக்காகப் போராடுவேன். மக்கள் எங்கள் பக்கம் இருக்கின்றனர். தற்போது இருக்கின்ற கூட்டணியையே தொடர்வேன்.
நீங்கள் தனிமைப்பட்டுவிட்டதாக உணருகின்றீர்களா?
என கேட்ட போது,
நானும் ஜனாதிபதியும்தான் 2014ஆம் ஆண்டு அரசாங்கத்திலிருந்து வெளியேறி வந்தோம். ஆனால் நான் இன்று தனிமைப்பட்டதாக உணரவில்லை. என்னுடன் மக்கள் இருக்கின்றனர்.
இப்படியொரு நிலைமை ஏற்படுமென ஒரு போதும் நான் நினைத்தும் பார்க்கவில்லை.
Reviewed by Madawala News
on
November 03, 2018
Rating: