தற்போது நாடு மிகவும் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொஸ்கம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ள அமைச்சர்கள் தொடர்பில் தெரியும் என்றால் அவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நில்வளா திட்டத்தில் கொமிஷன் பணம் கேட்ட இரு அமைச்சர்கள் தொடர்பில் தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய அரசாங்கம் தொடர்பில், போலிப் பிரசாரங்களைச் செய்யவேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லையெனவும் அரசாங்கத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் வேலைகள் குறித்து மாத்திரம் தெரிவித்தாலே போதுமென்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாடு அதல பாதாளத்தை நோக்கி....
Reviewed by Madawala News
on
October 15, 2018
Rating: