சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சி தலைவராக ரனில் ஒரு போதும் விடமாட்டார் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து அரசியலுக்கு வந்த தான் றனில் விக்ரமசிங்க தொடர்பில் தான் நன்கு அறிந்துவைத்துள்ளதாக குறிப்பிட்ட அவர் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சி தலைவராக ரனில் ஒரு போதும் விடமாட்டார் அடுத்த தலைவராக அகிலவிராஜ் காரியவசத்தையே அவர் கொண்டுவர காய் நகர்த்தி வருகிறார்.
அகிலவையே பிரபலப்படுத்துமாறு ஊடகங்களுக்கு ரனில் விக்ரமசிங்க கோரிக்கை முன்வைத்துள்ளார் என அவர் குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசிய கட்சி தலைவராக ரனில் ஒரு போதும் விடமாட்டார்..
Reviewed by Madawala News
on
October 23, 2018
Rating: