நீர்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் ; தேசிய நீர் வடிகாலமைப்பு சபை எச்சரிக்கை



தற்சமயம் நிலவும் வறட்சி காலநிலை தொடருமானால், நீர்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும்
என்று, தேசிய நீர் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படி சபையின் பிரதி பொது முகாமையாளர் ரஞ்சித் சமரசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமும் ஐந்து இலட்சத்து 50 ஆயிரம் கனமீற்றர் நீரை அம்பத்தலை சுத்திகரிப்பு நிலையம் விநியோகிக்கின்றது.

 உயர் பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தம் காரணமாக மட்டுப்படுத்தப்படுகிறது என்று கொழும்பு மத்தி பிரதேசத்திற்குரிய நீர் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் சுமித் பெரேரா தெரிவித்தார். 

ஏற்கனவே நாவல பகுதியில் நான்கு மணி நேர நீர்வெட்டு அமுலாகிறது என்று அவர் குறிப்பி;ட்டார்.
நீர்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் ; தேசிய நீர் வடிகாலமைப்பு சபை எச்சரிக்கை நீர்வெட்டை அமுல்படுத்த வேண்டி ஏற்படும் ; தேசிய நீர் வடிகாலமைப்பு சபை  எச்சரிக்கை Reviewed by Madawala News on September 16, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.