அமைச்சரவை இன்று மதியம் அவசரமாகக் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த அவசர அமைச்சரவைக் கூட்டம் நடக்கவுள்ளது.
எனினும், இந்த அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கான காரணம் என்னவென்று இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடந்திருந்தது.
இரண்டு நாட்கள் கழித்து அவசரமாக ஜனாதிபதி அமைச்சரவையைக் கூட்டியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாக புதன்கிழமைகளில் நடத்தப்படும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பும் நேற்று நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அவசர அமைச்சரவை கூட்டத்திற்கு ஜனாதிபதி அழைப்பு ..
Reviewed by Madawala News
on
September 13, 2018
Rating: