உள்ளூராட்சி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதன் மூலம் அழிந்து கொண்டிருக்கும் கட்சிக்கு உயிர் கொடுத்து தவறு செய்து விட்டோம் என ரவூப் ஹக்கீம் சொல்வதன் மூலம் இந்த முஸ்லிம் சமூகத்துக்கு தலைமை அருகதை அவருக்கில்லை என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
கடந்த தேர்தலில் கல்முனை போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் பிரதேசங்களில் முஸ்லிம் கட்சிகள் இணைந்து போட்டியிட உலமா கட்சி அறைகூவல் விடுத்தது. ஆனாலும் ஹக்கீம் தன் சொந்த நலன்களுக்காக முஸ்லிம் சமூகத்தை விலை பேசி ஐ தே கவுக்கு அடகு வைத்து விட்டார். இப்போது மீண்டும் சமூகத்தை மாற்றுவதற்காக தாம் தவறு செய்து விட்டதாக சொல்லிக்கொண்டு திரிகிறார்.
ரவூப் ஹக்கீமின் இந்த 18 வருட கால தலைமைத்துவத்தில் கண்ணைத்திறந்து கொண்டு விழுந்து விட்டோம், மடத்தனம் பண்ணி விட்டோம், ஏமாற்றி விட்டார்கள் என்ற வார்த்தைகள்தான் அவரிடம் அதிகமே தவிர வேறு எந்த சாதனையையும் இந்த சமூகத்துக்காக செய்யவில்லை.
ஆகவே முஸ்லிம் சமூகம் இன்னமும் இவரையும் இவரது கட்சியையும் ஆதரிப்பது என்பது ஹக்கீமின் பாஷையில் சொல்லப்போனால் கண்ணை திறந்து கொண்டே படு குழியில் விழுவதாகும்.
முஸ்லிம் காங்கிரசின் இத்தகைய தொடர் முட்டாள்த்தனத்துக்கெதிராக முஸ்லிம் சமூகம் வெளிப்படையான எதிர்ப்புகளை தெரிவிக்காவிட்டால் முஸ்லிம் சமூகம் பாரிய பாதிப்புக்குள்ளாகும் என்பதை பொறுப்பு வாய்ந்த உலமாக்கள் தலைமையிலான கட்சி என்ற வகையில் உலமா கட்சி சொல்லிக்கொள்கிறது.
அழிந்துகொண்டிருக்கும் UNP க்கு முஸ்லிம் காங்கிரஸ் உயிர் கொடுத்து தவறு செய்துவிட்டோம் “
Reviewed by Madawala News
on
August 13, 2018
Rating: