காட்டுக்குள் பியர் அருந்திக்கொண்டிருந்த இளம் பெண்களும் ஆண்களும் கம்பளை பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம்.
காதலர்களுடன் இணைந்து காட்டுக்குள் பியர் அருந்திக்கொண்டிருந்த இரு யுவதிகள் உட்பட நான்கு
கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுகளுடைய இரு யுவதிகளும் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவருமே இதன் போது கைது செய்யப்பட்டனர்.
கம்பளை நகரிலிருந்து மகாவலி அணைக்கட்டுப் பிரதேசத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குள் இரண்டு காதல் ஜோடிகள் மது அருந்துவதாக கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு குறித்த இரண்டு காதல் ஜோடிகளும் பியர் அருந்திக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.
இதன் போது மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்ட கம்பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் எஸ். அக்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இருவரையும் கைது செய்ததுடன் அவர்கள் பயணித்த காரையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜயந்த குறித்த நால்வரையும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.
காட்டுக்குள் பியர் அருந்திக்கொண்டிருந்த இளம் பெண்களும் ஆண்களும் கம்பளை பொலிஸாரிடம் சிக்கிய சம்பவம்.
Reviewed by nafees
on
August 10, 2018
Rating: