(ஹஸ்பர் ஏ ஹலீம்)
திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து
சட்டவிரோத வெளிநாட்டுச் சிகரட்டுக்களுடன் இன்று (17) ஒருவர் திருகோணமலை நீதிமன்ற வீதியில் உள்ள கடையில் விற்பனை செய்து வந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறக்குமதி வரியற்ற வெளிநாட்டு சிகரட்டுக்களை விற்பனை செய்து வந்த நிலையிலேயே திடீர் சுற்றிவலைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இல:392 ஏ,நீதிமன்ற வீதி, திருகோணமலை எனும் முகவரியை சேர்ந்த ரட்ணம் பாலசிங்கம் வயது (52) எனவும் தெரியவருகிறது.
கைப்பற்றப்பட்ட marlbora எனும் வர்க்கப் பெயரை உடைய சிகரட்டில் 25 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்கள் மற்றும் உரிய நபரையும் திருகோணமலை தலைமையகப் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோசன் தெரிவித்தார்.
இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளையும் திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவூம் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் குடும்பஸ்தர் கைது. #திருகோணமலை
Reviewed by Madawala News
on
August 18, 2018
Rating: